பிரித்தியங்கிராதேவி கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :1971 days ago
ஆத்தூர்: தேய்பிறை அஷ்டமியையொட்டி, ஆத்தூர் கைலாசநாதர் கோவிலில், பிரித்தியங்கிராதேவிக்கு, சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. முன்னதாக, கொரோனா நோய் நீங்கவும், உலக நன்மை வேண்டியும் சிறப்பு யாக பூஜை நடந்தது. பிரித்தியங்கிராதேவி மற்றும் சொர்ண பைரவர் சுவாமிகள், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.