உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெளியுலகில் தேடாதீர்

வெளியுலகில் தேடாதீர்

எச்சரிக்கிறார் ராமகிருஷ்ணர்

* கடவுளை வெளியுலகத்தில் தேடுவது அறியாமை.  
* கடவுளிடம் சரணடைந்தால் பாவத்தில் இருந்து விடுபடலாம்.   
* பசுவைத் தேடும் கன்று போல, கடவுளைக் காண மனம் ஏங்க வேண்டும்.
* பக்தி இல்லாமல் யாத்திரை செல்வதில் பயனில்லை.
* பக்தியுள்ளவனாக வாழு. அதே நேரம் மூடத்தனத்திற்கு இடம் அளிக்காதே.  
* தியானம் எளிதில் கைகூட உருவ வழிபாடு துணை நிற்கும்.  
* அமைதியாக இருப்பதே ஞானத்தின் அடையாளம்.
* கடவுளுக்கு வேண்டியவர், வேண்டாதவர் என யாருமில்லை.
* கடவுளின் அருள் இல்லாவிட்டால் அறியாமையில் இருந்து விடுபட முடியாது.
* ஆணவம் இருக்கும் வரை கடவுளை நாம் நெருங்க முடியாது.    
* பெண்கள் அனைவரும் அன்னை பராசக்தியின் அம்சமே.
* எந்த நிலையிலும் கலங்காதவனே உண்மையான ஞானி.
* எல்லா ஞானிகளின் உபதேசமும் ஒரே கருத்தையே உணர்த்துகின்றன.
* ஆராய்ச்சி மனப்பான்மையுடன் கடவுளை அணுகாதே.
* முழு நம்பிக்கையுடன் கடவுளின் திருவடியில் சரணடை.   
* கடவுளை அடைய எளிய வழி பக்தி.    
* கற்பக மரம் போல வழங்கும் வள்ளல் கடவுளே ஒருவரே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !