உத்தரகோசமங்கை மரகத நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலமாக நடந்தது.
மாணிக்கவாசகரால் பாடல்பெற்ற சிவஸ்தலமான உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி சமேத மங்களேஸ்வரிதாயார் கோயிலில் உள்ள பச்சைமரகத நடராஜர் சன்னதி உலகப்பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை மரகத நடராஜருக்கு பூசப்பட்ட சந்தனக்காப்பு களையப்பட்டு, மூலவருக்கு மகாஅபிஷேகம் நடைபெறும். அதன்படி இன்று நேற்று அபிஷேகங்கள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நடராஜர் சன்னிதியில் பச்சை மரகத நடராஜர் திருமேனியில் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இன்று அதிகாலை அருணோதய நேரத்தில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த அபூர்வ தரிசனத்தை, பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர். இரவு மாணிக்கவாசகருக்கு பெருமாள் காட்சியளிக்கும் நிகழ்ச்சி, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா, பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறும்.