தங்க சேஷ வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா
ADDED :1852 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய நடைபெற்று வருகிறது. தை தேர் உற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று காலை தங்க சேஷ வாகனத்தில் நம்பெருமாள் உலா வந்து அருள்பாலித்தார். அரங்கனை வணங்கும் ஆதிசேஷன் அலங்காரத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.