உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுப்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா

புதுப்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா

கடலுார்: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


கடலுார் புதுப்பாளையம் ஆர்.பி.,நகர் கட்டட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா கடந்த இருதினங்களுக்கு முன், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மாலை குரை கூடை எடுத்தல், இரவு எல்லை கட்டுதல் நடந்தது. நேற்று காலை அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மாலை மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது. இரவு அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மாலை மஞ்சள் நீராட்டு உற்சவம், இரவு பாவாடைராயன் சுவாமிக்கு கும்பம் கொட்டுதல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை புதுப்பாளையம் ஆர்.பி.,நகர் கட்டட தொழிலாளர்கள் குடியிருப்பு மக்கள் செய்திருந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !