அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை சுவாதி வழிபாடு
ADDED :1753 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், அந்திலி, லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதியை முன்னிட்டு நாளை சிறப்பு வழிபாடு நடக்கிறது.
திருக்கோவிலூர் அடுத்த அந்திலியில் உள்ள பழமையான லட்சுமி நரசிம்மர் கோவிலில், நாளை (4ம் தேதி) சுவாதியை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு லட்சுமி நரசிம்மர் ஹோமம், 10:00 மணிக்கு மகா திருமஞ்சனம், 10:30 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.