கால பைரவர் கோவிலில் அஷ்டமி வழிபாடு
ADDED :1960 days ago
பல்லடம்: பல்லடம் அருகே, கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.
பல்லடம் அடுத்த, கணபதிபாளையம் மலையம்பாளையம் பிரிவில் உள்ள ஸ்ரீவடுகநாதசுவாமி கோவிலில் காலபைரவர் மூலவராக அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, பைரவருக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் வடுகநாத சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் வெள்ளை பூசணி, மற்றும் எலுமிச்சையால் விளக்கு ஏற்றி காலபைரவரை வழிபட்டனர். கோவில் கமிட்டி சார்பில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.