மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா
ADDED :1686 days ago
சோமனூர்: ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில் இன்று திருக்கல்யாண உற்சவமும், பொங்கல் திருவிழாவும் நடக்கின்றன.சோமனூர் அடுத்த, ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில் பழமையானது. இங்கு, கடந்த, 23ம்தேதி பூச்சாட்டுதலுடன் திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. அம்மனுக்கு தினமும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. தினமும் பக்தர்கள் பூவோடு எடுத்து, அக்னி கம்பம் சுற்றி ஆடினர்.விநாயகர் மற்றும் கருப்பராயன் பொங்கல் வைத்து, பெண்கள் வழிபட்டனர். இன்று அதிகாலை, அம்மனுக்கு திருக்கல்யாணம் மற்றும் அம்மை அழைத்தல் நடக்கிறது. தொடர்ந்து, பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து, பொங்கல் வைத்து வழிபாடு நடத்துகின்றனர்.