உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தேரி கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

புத்தேரி கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

பெண்ணாடம், : பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், மகா மாரியம்மன் சுவாமிக்கு அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.

இதனை முன்னிட்டு, மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பிரகாரத்தில் உள்ள மகா மாரியம்மன் சுவாமிக்கு, அன்று காலை 10:30 மணியளவில் பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம்; 11:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !