உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல்

மானாமதுரை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல்

மானாமதுரை :மானாமதுரை தயாபுரம் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு ஏராளமானவர்கள் பூக்குழி இறங்கினர்.

இக்கோயிலில் பங்குனி விழாவை ஒட்டி கடந்த10 நாட்களுக்கு முன்பு முத்து மாரியம்மனுக்கும் கோயில் பரிவார தெய்வங்களுக்கும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து ஏராளமான பெண்கள் காப்புக்கட்டி விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்ற விழாவின் போது மண்டகப்படிதாரர்கள் சார்பில் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஏராளமான பக்தர்கள் மானாமதுரை வைகையாற்றிலிருந்து பால்குடங்கள், அக்னிச்சட்டிகள் எடுத்து மேளதாளத்துடன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்து அம்மன் சன்னதி எதிரே பூக்குழி இறங்கினர், பலர் மாவிளக்கு பூஜை பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பூஜாரி சுப்ரமணியன் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !