பங்குனி உத்திர பால்குடம்: காப்பு கட்டிய முருக பக்தர்கள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா மார்ச் 22 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாளை( மார்ச் 28) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால்குடம், காவடி, அலகு குத்தும் பக்தர்கள் கையில் காப்புக்கட்டினர். வழிவிடுமுருகன் கோயிலில் தினமும் வள்ளி, தெய்வானை சமேத முருகருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் நடக்கிறது.தினமும் இரவு பக்திசொற்பொழிவு, சண்முகார்ச்சனை நடக்கிறது. நேற்று காவடி, அலகு குத்தும் பக்தர்கள் கையில் காப்புக்கட்டியுள்ளனர்.முக்கிய நிகழ்ச்சியாக நாளை பங்குனி உத்திரம் அன்று காலையில் பிரம்புரிஸ்வரர் கோயிலிலிருந்து காவடிகள், பால்குடம் எடுத்து வந்து மதியம் 12:00 மணிக்கு அபி ேஷக ஆராதனை நடக்கிறது.மாலையில் பூக்குழி இறங்குதல் நடைபெறுகிறது. முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கொரோனா பரவல் விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.