உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி

வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட தேவாலயங்களில் நேற்று நடந்த குருத்தோலை பவனியில், திரளான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன், ஜெருசேலம் நகரை நோக்கி சென்றபோது, மக்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி வரவேற்றதை நினைவுகூரும் வகையில், நாகை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் நேற்று குருத்தோலை பவனி நடந்தது. இதையொட்டி, வேளாங் கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், நேற்று காலை, 6:௦௦ மணிக்கு சிறப்பு கூட்டுப் பாடல் திருப்பலி நடந்தது. 7:௦௦ மணிக்கு குருத்தோலை புனிதம் செய்யப்பட்டு, பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில், குருத்தோலை பவனி நடந்தது.திரளான பக்தர்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி, தேவாலயத்தை ஒட்டிய வீதிகளில் பவனி வந்தனர். தேவாலயத்தின் கீழ் கோவிலில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திருப்பலி, ஜெபமாலை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !