நவசக்தி வாராஹி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு வழிபாடு
ADDED :1865 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையம் ஸ்ரீ பாரதி நகரில் வாராகி மந்திராலயம் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள நவசக்தி வாராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியை ஒட்டி சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வாராகி மந்திராலய நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.