திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
ADDED :1808 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே திருவரங்கம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு இயேசு உயிர்பெற்றெழுந்ததையடுத்து வான வெடிகள் வெடித்து இயேசு கிறிஸ்துவின் அன்பு சமாதானத்தையே பறைசாற்றிடவும், நீங்களே என் சாட்சிகள் என்பதனை விளக்கி பங்கு தந்தையார் ஜெபஸ்டியன் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து கொண்ட மக்கள் இயேசு புகழ் பாடல்கள் பாடி வழிபட்டனர்.