உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளழகருக்கு சைத்திய உபச்சாரம் சேவை

கள்ளழகருக்கு சைத்திய உபச்சாரம் சேவை

மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று (ஏப்.,28) காலை 7:00 மணிக்கு பத்தி உலாத்துதல் நடைபெற்றது. காலை 10:30 மணிக்கு சேஷ வாகன புறப்பாடு நடக்கிறது.

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகையாற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி கொரோனா பரவல் காரணமாக அழகர்கோவில் கள்ளழகர் கோயில் வளாகத்தில் நேற்று (ஏப்.,27 ல்) நடைபெற்றது. நிகழ்ச்சியில் பச்சை பட்டுடுத்தி அழகர் அருள்பாலித்தார். விழாவில் இன்று காலை 7:00 மணிக்கு பத்தி உலாத்துதல் நடைபெற்றது. காலை 10:30 மணிக்கு சேஷ வாகன புறப்பாடு நடக்கிறது. ஏப்.,29 காலை 10:00 மணிக்கு மண்டூக முனிவருக்கு மோட்சம் அளித்தல், ஏப்.,30 இரவு பூப்பல்லாக்கு நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை திருக்கல்யாண மண்டபத்தில் அந்தந்த நாளுக்கான வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அழகர் அருள்பாலிப்பர். பூஜை நேரம், வீதி உலா நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !