சீட்டணஞ்சேரி சடையம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை
ADDED :8 hours ago
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி சடையம்மன் கோவிலில், ஆடி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
உத்திரமேரூர் வட்டம், சீட்டணஞ்சேரி சடையம்மன் கோவிலில், நேற்று காலை 7:30 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மாலை 5:00 மணிக்கு அம்மன் குடம் அழைத்து வருதல் நடைபெற்றது. அதை தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலா விமரிசையாக நடைபெற்றது. மேலும், துர்க்கையம்மனுக்கு வரும் 14ம் தேதி கூழ்வார்த்தல், மாலை 5:00 மணிக்கு அம்மன் வீதியுலா நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சீட்டணஞ்சேரி கிராம மக்கள் செய்து வருகின்றனர்.