சர்க்கரை வழிபாடு
ADDED :1907 days ago
அழகர் தரிசனம் நம் வாழ்வில் இனிமையைக் கொடுக்கும். அதனால் தான் அவர் ஆற்றில் இறங்கும் போது, பக்தர்கள் செம்பில் சர்க்கரை நிரப்பி நிவேதனம் செய்து அனைவருக்கும் தானம் அளிப்பர். “இனிக்கும் சர்க்கரை போல், எங்கள் வாழ்வையும் இனிமையாக்கு அழகர் பெருமானே!” என்று அப்போது வேண்டுவர். சர்க்கரைக்கு பதிலாக சாக்லேட் வைப்பது தற்போது வழக்கத்தில் உள்ளது.