பூவேந்தியநாதர் கோயிலில் பிரதோஷ விழா
ADDED :1717 days ago
மாரியூர்: மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவள நிறவல்லியம்மன் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. மூலவர், நந்தி பகவானுக்கும் பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்கள் யாரும் பூஜையில் பங்கேற்கவில்லை. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ விழா கமிட்டியினர் செய்திருந்தனர். உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் உள்ள மூலவருக்கும், பிரதோஷ நந்திக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.