உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்லியனுார் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவங்கியது

வில்லியனுார் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவங்கியது

வில்லியனுார்: வில்லியனுார் வரதராஜப்பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று துவங்கியது.


வில்லியனுார் பிரசித்தி பெற்ற தென்கலை வரதராஜப்பெருமாள் கோவிலில் 17ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, நேற்று காலை 6:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், சிவா எம்.எல்.ஏ., மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இந்து சமய அறநிலையத் துறை அறிவுறுத்தல்படி, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. விழா நாட்களில் தினமும் காலையில் சிறப்பு திருமஞ்சனம், அலங்கரிக்கப்பட்ட சுவாமி உள்புறப்பாடு நடை பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி ராமதாஸ் தலைமையில் உற்சவதாரர்கள் செய்துள்ளனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !