சௌந்திரராஜப் பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி
ADDED :1568 days ago
உடுமலை : உடுமலை நெல்லுக்கடை வீதி சௌந்திரராஜப் பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர் அருள்பாலித்தனர். கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கோயில் வளாகத்திற்குள் பக்தர்களின்றி விழா நடைபெற்றது.