உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேத்தியாத்தோப்பு முனியப்பர் கோவில் கும்பாபிஷேகம்

சேத்தியாத்தோப்பு முனியப்பர் கோவில் கும்பாபிஷேகம்

சேத்தியாத்தோப்பு: முனியப்பர் கோவில், கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் நலந்து கொண்டனர்.


சேத்தியாத்தோப்பு அடுத்த அகரசோழத்தரம்  கிராமத்தில்  உள்ள முனியப்பர் கோவிலில் கடந்த ஜூன், 28 ம் தேதி மாலை, 6:00 மணிக்கு விசேஷ பூஜையுடன் வாஸ்துசாந்தி, காப்பு கட்டுதல், தீபாராதனை நடந்தது. அடுத்தடுத்த தினங்களில் பல்வேறு வழிபாடுகளை தொடர்ந்து, நேற்று காலை ஹோமம், காப்பு கட்டுதல், கோ பூஜை உள்ளிட்டவைகள் நடந்தன. காலை, 9:50 மணியளவில் யாக சாலையிலிருந்து கும்ப கலசம் புறப்பட்டு, 10:35 மணிக்கு கோபுர கலசம் மற்றும் மூலவர் முனியப்பர் சாமிக்கு புனித கங்கை நீர் ஊற்றி, கும்பாபிஷகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழக்குழுவினர், சோழத்தரம், அகரசோழத்தரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !