வரதராஜ பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் சாற்றி வழிபாடு
ADDED :2 hours ago
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் சன்னதியில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசம் சாற்றி வழிபாடு நடத்தினர்.
எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பெருமாள் சன்னதியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து புதிய வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு ஆஞ்சநேயர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டார். பின்னர் தீப தூப ஆராதனைகள் நடந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமானவர்கள் தரிசனம் செய்தனர்.