ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு பூஜை
ADDED :1569 days ago
பொள்ளாச்சி : ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில், ஆனி மாத வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை நடந்தது. வளர்பிறை ஏகாதசியையொட்டி பெருமாளுக்கு, பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள், சந்தனம் என, 12 வகையான அபிேஷகமும், துளசி, குண்டுமல்லி, செம்பருத்தி, அரளி, செண்பக பூ உள்ளிட்ட பல்வேறு மலர்களால் அலங்கார பூஜையும் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.