புத்தேரி பெருமாள் கோவிலில் சுதர்சன ஜெயந்தி சிறப்பு வழிபாடு
ADDED :1569 days ago
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் சுதர்சன ஆழ்வார் என்ற சக்கரத்தாழ்வார் அவதரித்த நாளான நேற்று சுதர்சன ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை 10:30 மணியளவில் மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிேஷகம், பகல் 11:30 மணியளவில் மூலவர் சுவாமி, சக்கரத்தாழ்வாருக்கு மகா தீபாராதனை நடந்தது. பின், உலக மக்கள் நலன்பெற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.