சாப்பிடப் போறீங்களா...
சாஸ்திரம் சொல்றதைக் கேளுங்க!
* பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்.
அதுவும் மிதமாகவும், சத்து மிக்கதாவும் இருக்க வேண்டும்.
* அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் நோய் வளரும். ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்கவும், மூச்சு முட்டவும் சாப்பிடாதீர்கள்.
* மிளகு சேர்ப்பதால் உணவிலும், உடலிலும் உள்ள விஷத்தன்மை நீங்கும்.
* சீரகம் சேர்ப்பதால் உடம்பு சீராகவும், குளிர்ச்சியாவும் இருக்கும்.
* வெந்தயத்தை நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வர உடம்பிலுள் சூடு குறையும்.
* கடுகு உடலில் உள்ள சூட்டை சமமாக வைத்திருக்கும்.
* இஞ்சி சேர்ப்பதால் பித்தம், தலைசுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் ஏற்படாது.
* சாப்பிடும் முன் கை, கால், வாயை நன்றாக கழுவுவது அவசியம்.
* காலில் உள்ள ஈரம் உலரும் முன்பாக சாப்பிடத் தொடங்க வேண்டும்.
* சாப்பிடும் போது பேசவோ, படிக்கவோ, கேளிக்கையில் ஈடுபடவோ கூடாது. இடதுகையை கீழே ஊன்றக் கூடாது
* கதவை திறந்து வைத்தபடி வாசலுக்கு எதிரில் அமர்ந்து சாப்பிடக் கூடாது.