வேணுகோபால சுவாமி கோயிலில் ஏகாதசி பூஜை
ADDED :1621 days ago
நத்தம் : -நத்தம் கோவில்பட்டி பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயிலில் ஆடி மாத ஏகாதசி பூஜை நடந்தது. இதில் சுவாமிக்கும், தேவியர்களுக்கும் திருமஞ்சனம் நடந்தது. துளசி, மல்லிகை, ரோஜா மலர்களால் ஆன மாலைகளை அணிவித்து தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி தந்தார். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.