உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ஆடி கிருத்திகை விழா

இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ஆடி கிருத்திகை விழா

மதுரை : மதுரை மேலமாசி வீதிஅருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் ஆடி கிருத்திகை முன்னிட்டு ராஜ அலங்காரத்தில் முருகன் அருள் பாலித்தார்.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட , இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நேற்று (2ம் தேதி)  ஆடி கிருத்திகை முன்னிட்டு முருகனுக்கு அலங்கார பூஜைகள் நடந்தது. இந்த வழிபாட்டில், கண்காணிப்பாளர் கணபதி ராமன் மற்றும் கோயில் ஊழியர்கள், சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !