கடவுளை உறவுமுறை கொண்டாடி வழிபடுவது ஏன்?
ADDED :1713 days ago
கடவுளை உறவுமுறை கொண்டாடி வழிபடுவது எளிமையானது. தாய், தந்தை, நண்பன், காதலியாக பல்வேறு பாவங்களில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் கடவுளை வணங்கி நமக்கு வழிகாட்டியுள்ளனர். இதில் மாத்ருபாவம் என்னும் தாயாக வழிபடுவது மிக உயர்வாக கருதப்படுகிறது. அதனால் தான் சுவாமிக்கு அம்மையப்பன் தாயுமானவர் என்றெல்லாம் பெயர் சூட்டியுள்ளனர்.