கடலாடியில் கூழ் ஊற்றி சிறப்பு வழிபாடு
ADDED :1617 days ago
கடலாடி: கடலாடி முத்தாலம்மன் கோயிலில் ஆடி மாத சிறப்பு பூஜையை முன்னிட்டு கோயில் முன்பாக கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மூலவர் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பூஜைகளை கூரியைய்யா செய்திருந்தார். சாந்தி தலைமையில் பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.