உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரப் பிரகாரமாக ஜொலிக்க போகிறது ராமேஸ்வரம் கோயில் மூன்றாம் பிரகாரம்

சித்திரப் பிரகாரமாக ஜொலிக்க போகிறது ராமேஸ்வரம் கோயில் மூன்றாம் பிரகாரம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயில் மூன்றாம் பிரகாரம், நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல், முழுவதும் பல வர்ணங்கள் அடங்கிய சித்திர பிரகாரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மூன்றாம் பிரகாரம், ராமநாதபுரம் மன்னர் திருமலை சேதுபதி காலத்தில் துவங்கி, 1794ல் முத்துராமலிங்க சேதுபதியால் கட்டி முடிக்கப்பட்டது. நீளமான பிரகாரத்தில் உள்ள தூண்களின் அமைப்பு, நடைபாதையின் இருபுறமும் உள்ள திண்ணைக்குறடுகள், தூண்களுக்கு இடையே அமைந்துள்ள புராணக்கதைகளை செல்லும் சுதை சிற்பங்களால் உலகப்பிரசித்தி பெற்றது.  நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை பலவர்ண சித்திரங்கள், சித்திர தூண்கள் அடங்கிய பிரகாரமாக விளங்கி வந்தது. நாளடைவில், தூண்களில் இருந்த சிற்பவேலைப்பாடுகள் சேதமடைந்தன. கடந்த 1975 கும்பாபிஷேகத்தின் போது, சுதை சிற்பங்கள் அகற்றப்பட்டு சிமென்ட் கலவையால் பூசப்பட்டு, சாதாரண தூண்களாக மாறியது.

தற்போது இந்து பிரகாரத்தில் சேதமடைந்த கமலம் பெயின்டிங் பணிகள் துவங்கப்பட்டு, புதுப்பொலிவு பெற்று வரும் நிலையில், பிரகாரத்திலுள்ள சுதை சிற்பங்களை சீரமைத்து, முன்பு போல் சித்திரப்பிரகாரமாக மாற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.  இதற்காக, 50 லட்ச ரூபாயில் பிரகாரத்திலுள்ள தூண்கள், பக்கவாட்டில் உள்ள சிற்பங்களுக்கு பல வர்ணங்களில் பெயின்ட் பூசப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !