வேப்பிலை மாரியம்மன் கோவில் ஆண்டு விழா
ADDED :1543 days ago
திருப்பூர்: வீரபாண்டி வேப்பிலை மாரியம்மன் கோவில் இரண்டாவது ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை ஆகியன நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. அப்பகுதியினர் முளைப்பாலிகை எடுத்து, கரட்டு பெருமாள் கோவிலிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக வேப்பிலை மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலம் சென்றனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.