இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :1479 days ago
மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மத்தியபுரி அம்மனுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட , இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நேற்று (20ம் தேதி) பிரதோஷம் என்பதால், நந்தியம்பெருமான், மூலவர், பிரதோஷ நாயகருக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. இந்த வழிபாட்டில், கண்காணிப்பாளர் கணபதி ராமன் மற்றும் கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். அரசு வழிகாட்டுதலுடன் பக்தர்கள் இன்றி சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் பிரதோஷ நாயகி உள்பிரகாரத்தில் வலம் வந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.