உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லிஅம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

செல்லிஅம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் செல்லிஅம்மன் கோயில் 50ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடத்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,பக்தி பஜனை பாடல்கள் நடந்தது.காப்பு கட்டிய பக்தர்கள் முருகன் கோயிலில் இருந்து பஸ் ஸ்டாண்ட், பத்திரகாளியம்மன்,அய்யனார் கோயில், வடக்கூர் உட்பட கிராமத்தின் முக்கிய விதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து வேல் குத்தியும்,அக்கினி சட்டி எடுத்தும் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.அப்போது பாதுகாப்பு பணிக்கு வந்த தீயணைப்பு வீரர் பணி முடிந்த உடன் போலீஸ் உடையுடன் பூக்குழி இறங்கினார். பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை பூத்தட்டு நிகழ்ச்சி நடந்தது.அம்மனுக்கு பால், சந்தனம்,மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகம் தீபாரதனை நடந்தது. விழாவில் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து பலரும் கலந்து கொண்டனர்.கவினா கல்வி குழுமத்தின் தலைவர் கண்ணதாசன் பாண்டியன்,தாளாளர் ஹேமலதா,செல்வா ஹோட்டல் உரிமையாளர் பூமிநாதன்,ஜெய் ஸ்ரீ பவானி ஜுவல்லரி உரிமையாளர் ஜெயகிருஷ்ணன் உட்பட பலரும் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !