நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :5 hours ago
நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர் கோவிலில் ஆடி மாத பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.
அதனையொட்டி, நேற்று மதியம் விநாயகர், ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.இரவு 8 மணிக்கு ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோயிலை வலம் வந்து ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான விழாக் குழுவினர்கள் செய்திருந்தனர்.