உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் குவிந்த பக்தர்கள்

ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் குவிந்த பக்தர்கள்

ராமேஸ்வரம்: 3 நாள்களுக்கு பின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கொரோனா பரவலை தடுக்க வெள்ளி, சனி, ஞாயிறு கிழமையில் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அரசு தடை விதித்தது. அதன்படி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு கடந்த 3 நாட்களாக விதித்த தடை முடிந்ததும், இன்று ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்தனர். இதன்பின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் ஏராளமான வாகனத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கடல், கடற்கரை அழகை கண்டு ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !