மழை வேண்டி அர்சுணன் தபசு
ADDED :1706 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி அடுத்த மஜீத் கொள்ளஹள்ளியில், ஊர் கவுண்டர் சென்னப்பன், மந்திரி கவுண்டர் மாதையன் தலைமையில், தின்னக்கழனி திருப்பதி நாடக சபாவினரால் மழை வேண்டி அர்சுணன் தபசு நாடகம் நடந்தது. முன்னாள் படைவீரர்கள் லோகநாதன் மற்றும் சாமிநாதன் ஆகியோர், கிராம மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நாடகத்தை கண்டுகளிக்க ஏற்பாடு செய்திருந்தனர்.