உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விசேஷம்...இது வித்தியாசம்

விசேஷம்...இது வித்தியாசம்


* ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதிஜகந்நாதர் கோயிலில் எட்டு யானை, எட்டு நாகம், ஆதிசேஷன் குடைபிடிக்க நின்ற கோலத்தில் சந்தான கோபாலர் அருள்பாலிக்கிறார்.
* திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வேணுகோபாலன் கோயிலில் கண்ணன் சிலை நேபாளத்தில் பாயும் கண்டகி நதியில் கிடைக்கும் சாளகிராமக் கல்லால் ஆனது.
* கேரளா குருவாயூர் உன்னி கிருஷ்ணர் பாதாள அஞ்சனம் மூலிகையால் உருவாக்கப்பட்டவர்.
*  குருவாயூர் உன்னி கிருஷ்ணன், அம்பலப்புழா கிருஷ்ணன், திருப்பணித்துரா வேணுகோபால சுவாமி  மூன்று சிலைகளும் மகாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்டவை. இந்த மூன்று கோயிலிலும் பிரசாதம் பால் பாயாசம்.
* குஜராத் மோட்ச துவாரகையில் உள்ள கிருஷ்ணருக்கு மணிக்கு ஒருமுறை உடை மாற்றி அலங்காரம் செய்வர். இவருக்கு தினமும் 17 முறை நைவேத்யம் படைக்கப்படுகிறது.
* குஜராத் பேட் துவாரகையில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் அர்ச்சகர் சேலை உடுத்தி, காலில் தண்டை அணிந்து பூஜை செய்கிறார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !