உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரநாராயண பெருமாளுக்கு குருவாயூரப்பன் அலங்காரம்

சரநாராயண பெருமாளுக்கு குருவாயூரப்பன் அலங்காரம்

 பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நேற்று ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு முடிந்து, திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மூலவர் பெருமாள் குருவாயூரப்பன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல் 1:00 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவையும் நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !