தோப்புக்கரணமிடும் முறை
ADDED :1754 days ago
விநாயகரை வழிபடும் முறையைத் தெரிந்து கொள்வோம். சன்னதியில் முன்புறமாக தலையை குனிந்து கொண்டு வலக்கையை இடது பொட்டிலும், இடக்கையை வலது பொட்டிலும் வைத்து மூன்று முறை குட்டிக் கொள்ளுங்கள். பின்னர் இதே போல் காதுகளை பிடித்து மூன்று முறை தோப்புக்கரணம் இடுங்கள். பிறகு உங்களுக்குத் தெரிந்த ஏதாவது விநாயகர் ஸ்லோகம் சொல்லியபடி சன்னதியை மூன்று முறை சுற்றுங்கள்.