உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவபுரிபட்டியில் வடுகபைரவர் பூஜை

சிவபுரிபட்டியில் வடுகபைரவர் பூஜை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் தேய்பிறை அஷ்டமியையொட்டி வடுக பைரவர் பூஜை நடந்தது. சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட தர்மஷம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் நேற்று பகல் 12:00 மணிக்கு யாக வேள்வி நடத்தப்பட்டது. தொடர்ந்து 6 உயர வடுக வைபரவருக்கு 16 வகையான அபிஷேகங்களும் வழிபாடும் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். கோயில் சூப்பிரண்டு ஜெய்கணேஷ் முன்னிலையில் ரவி சிவாச்சாரியார் பூஜைகளை நடத்திவைத்தார். பிரான்மலை மங்கைபாகர் கோயிலில் உள்ள வடுக பைரவருக்கும், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் உள்ள கால பைரவருக்கும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !