திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி வழிபாடு
ADDED :1762 days ago
திருவதிகை: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி பூமிதேவி கோவர்த்தன கிரிதாரி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெருமாளுக்கு கோவர்த்தன கிரிதாரி அலங்காரம் மற்றும் அண்ணா கூட உற்சவம் நடந்தது. உபயதாரர் ஜி.ஆர்.கே., எஸ்டேட் துரைராஜ், கோமதி துரைராஜ் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.