கொடைக்கானல் மலைப்பகுதியில் புரட்டாசி திருவிழா
ADDED :1446 days ago
கொடைக்கானல்: கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப்பகுதியில் பெருமாள் கோயில்களில் புரட்டாசி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பஜன் நடந்தன. கொடைக்கானல் வரதராஜ பெருமாள், பண்ணைக்காடு ராமர், வெங்கடாஜலபதி கோயில், தாண்டிக்குடி சௌமியநாராயணப் பெருமாள், பூலத்தூர் ராமர் கோயில், கே. சி .பட்டி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் புரட்டாசி கடைசி வார்த்தை அனுசரிக்கும் விழாக்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.