வீரபாகுவுக்கு என்ன பிடிக்கும்?
ADDED :1765 days ago
முருகனின் படைத்தளபதியாக வீரபாகுவும், அவருக்கு துணையாக வீரமகேந்திரர் என்பவரும் விளங்கினர். சூரசம்ஹாரத்தின் போது இவர்கள் செய்த சேவைக்காக திருச்செந்துாரில் தனக்கு முன்பாக மண்டபத்தில் வீற்றிருக்க அனுமதியளித்தார். இப்போதும் வீரபாகுவுக்கு பூஜை செய்த பின்னரே, முருகனுக்கு பூஜை நடக்கிறது. வீரபாகுவுக்கு பிடித்த அரிசி பிட்டை படைத்தால் விருப்பம் நிறைவேறும்.