அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலகாப்பு தீர்த்தவாரி
ADDED :1688 days ago
மதுரை : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலகாப்பு உற்ஸவம் நடைபெற்று வருகிறது. உற்ஸவத்தின் முக்கிய நிகழ்வான ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெற்றது. சுவாமி நுாபுர கங்கைக்கு புறப்பாடாகி, தைலம் சாத்தி தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுந்தராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.