திருவண்ணாமலையில் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது மஹா தீப கொப்பரை
ADDED :1425 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கொட்டும் மழையில், மஹா தீப கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் கொண்டாடப்படும் தீப திருவிழாவில் நாளை மாலை மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை முன்னிட்டு, அதிகாலை 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு. அருணாசலேசுவரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர், 150 கிலோ எடை, ஐந்து அடி உயரம் கொண்ட மஹா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி கோஷத்துடன் 2,668 அடி உயர மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. மலை உச்சிக்கு கோவில் ஊழியர்கள், தீப கொப்பரை கோவில் ஊழியர்கள் தோளில் சுமந்தபடி மலை உச்சிக்கு எடுத்த சென்றனர்.