ஹரஹர சிவனே அருணாசலனே அண்ணாமலையே போற்றி
திருக்கார்த்திகையன்று இதைப் பாடுங்கள்
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.
....
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
துாமாமழை துறுகல் மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை அணையும்பொழில் அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை இலரே.
............
பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.
.............
உதிரும்மயிர் இடுவெண்தலை கலனாஉல கெல்லாம்
எதிரும்பலி உணல்ஆகவும் எருதுஏறுவது அல்லால்
முதிரும் சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்
அதிரும்கழல் அடிகட்குஇடம் அண்ணாமலை அதுவே.
..............
மரவம்சிலை தரளம்மிகு மணிஉந்துவெள் ளருவி
அரவம்செய முரவம்படும் அண்ணாமலை அண்ணல்
உரவம்சடை உலவும்புனல் உடனாவதும் ஓரார்
குரவம்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.
..............
பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி அணிவார்அது பருகிக்
கருகும்மிடறு உடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மனம் உடையார்தமக்கு உறுநோய்அடை யாவே.
...............
கரிகாலன் குடர்கொள்வன கழுதாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்தலை உதையுண்டுஅவை உருள
எரியாடிய இறைவர்க்குஇடம் இனவண்டு இசைமுரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே.
.............
ஒளிறுாபுலி அதள்ஆடையன் உமைஅஞ்சுதல் பொருட்டால்
பிளிறுாகுரல் மதவாரண வதனம்பிடித் துரித்து
வெளிறுாபட விளையாடிய விகிர்தன்இரா வணனை
அளறுாபட அடர்த்தான்இடம் அண்ணாமலை அதுவே.
............
விளவார்கனி படநுõறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவணம் அழலாகிய அண்ணாமலை அண்ணல்
தளராமுலை முறுவல்உமை தலைவனடி சரணே.
................
வேர்வந்துற மாசுஊர்தர வெயில்நின்று உழல்வாரும்
மார்பம்புதை மலிசீவரம் மறையாவரு வாரும்
ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை அண்ணல்
கூர்வெண்மழுப் படையான்நல்ல கழல்சேர்வது குணமே.
..............
வெம்புந்திய கதிரோன்ஒளி விலகும்விரி சாரல்
அம்புந்தீமூ எயில்எய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயில்ஆலுவ குளிர்காழியுண் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.