உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பைரவருக்கு பூஜை

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பைரவருக்கு பூஜை

 திண்டுக்கல்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.


தேய்பிறை அஷ்டமி மற்றும் ஜென்ம அஷ்டமியை முன்னிட்டு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஆறு கால சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கொரோனா விதிகளை பின்பற்றி பக்தர்கள் பலர் தரிசனம் செய்தனர். அதேபோல், திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன், ரயிலடி சித்தி விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, சத்திரம் தெரு மற்றும் கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !