உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் கார்த்திகை இரண்டாம் சோமவாரத்தை முன்னிட்டு பூஜை சிறப்பாக நடைபெற்றது.

விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் கார்த்திகை இரண்டாம் சோமவாரத்தை முன்னிட்டு நேற்று ( நவ.,29) கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நடந்த வழிபாட்டில் கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !