பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா
ADDED :1403 days ago
உசிலம்பட்டி: வாலாந்தூர் அருகே நாட்டாபட்டி கிராமத்தில் இந்த ஆண்டு நெல் விளைச்சல் நல்லபடியாக நடக்கவும், போதுமான மழை கிடைக்கவும் வேண்டி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. கிராம மக்கள் வீடுகள் தோறும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். கோயில் பூசாரிகள் பொங்கல் வைத்த வீடுகளுக்கு நேரிடையாக சென்று தேங்காய், பழம் வைத்து பூஜைகள் நடத்தி மக்களுக்கு ஆசிகள் வழங்கினர்.