உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்கள் அச்சம்: சடங்குகள் செய்யும் இடம் மிக மோசம்

பக்தர்கள் அச்சம்: சடங்குகள் செய்யும் இடம் மிக மோசம்

மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே குமரலிங்கத்தில் பக்தர்கள் பயன்படுத்தும் ஆற்றுப் பாதை மிக மோசமாக உள்ளது. மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் அமராவதி ஆற்றங்கரையில் காசி விசு வநாதர் கோவில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டது, இதில் குறிப் பிடத்தக்கதாக இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் தலமாக இது உள்ளது. இ தனால் பல மாவட்டங்களில் இருக்கும் பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு இங்கு வந்து திதி கொடுப்பதை வழக் கமாக கொண்டுள்ளனர்.

இந்தசடங்கு, அமராவதிஆற்றையும்கோ விலையும் இணைக்கும் படிக்கட்டுகளில் உள்ள காலி இடங்களில் நடக்கிறது இந்த சடங்கிற்கு பின்பு ஆற்றில் சென்று பக்தர் கள் நீராடுவது சம்பிரதாயம் ஆகும். ஆனா ல் ஆற்றுக்கு செல்லவேண்டிய பாதை மி க மோசமாக உள்ளது. படிக்கட்டிலிருந்து ஆறு வரை முட்புதர்கள் ,சகதி,பள்ளங்கள் மிகக் குறுகலான பாதைஎன பயன்படுத்த முடியாத அளவில் இந்த இடம் உள்ளது. இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: " திதி கொடுத்த பின் குளிக்க செல்லும் இடம் மிகவும் ஆபத்தாக உள்ளது. பாம்பு கள், விஷப்பூச்சிகள்,நீர் சுழல், சகதி, ஆ ளை மறைக்கும் புதர்கள் இவற்றைக்கட ந்து தான் ஆற்றுக்கு செல்லவேண்டிய கட் டாயம் உள்ளது. இதனால்இங்கு திதி கொ டுக்க வரும் பக்தர்கள் மிகவும் அச்சப்படு கின்றனர். ஆபத்தும்உள்ளது இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு பக்தர்கள் ஆ ற்றுக்கு சென்று திரும்பும் பாதை ஆக்கி ரமிப்புகளை அகற்றிசுத்தம்செய்ய வேண் டும்" என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !